நெல்லிக்காய் ஜூஸ்


Wanted Agent:
நெல்லிக்காய் ஜூஸ் தேவைபடுவோர் 
mail: arunaimarketingnkl@gmail.com

எதற்கெடுத்தாலும் மனதை அதிகம் அலட்டிக் கொள்வதே மன அழுத்தத்திற்கு காரணம் என்கிறது ஆயுர்வேதம். அடைய விரும்பும் லட்சியத்தை எட்ட முடியாமல் போதல். பதற்றமாக செயல்படுதல், உணர்ச்சி வசப்பட்டு பேசுதல் போன்றவை மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. இதனால் மன நலம் மட்டுமல்லாது உடல்நலமும் பாதிப்பிற்குள்ளாகிறது.

உடல்நல பாதிப்புகள்

மன அழுத்தம் தொடர்ந்து இருந்தால் உடலின் ஹார்மோன்களில் மாற்றத்தை உண்டாக்கும். மன அழுத்த நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படும். அடிக்கடி மன அழுத்தம் ஏற்பட்டால், ரத்தக் கொதிப்பு அதிகமாகி, இதயம் பாதிக்கப்படும். வயிற்றில் அல்சர் ஏற்பட்டு புண் உண்டாகும். சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் மன அழுத்தத்தினால்தான் ஏற்படுகிறது. உணவும் மன அழுத்தமும் உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை மன அழுத்தம் போக்கும். இது தவிர நாம் உண்ணும் உணவும் மன அழுத்தத்தை போக்கும். அமுக்கிராக் கிழங்கு அஸ்வகந்தா – மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்து. நரம்புகளை பலப்படுத்தும்.

மூட்டு, திசுக்கள், இவற்றை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். நல்ல உறக்கத்தை உண்டாக்கும். வைட்டமின் சத்துக்கள் அமெரிக்காவில் உள்ள அலாபாமா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி வைட்டமின் ‘சி’ மன அழுத்தம் உண்டாக காரணமான ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. ஆரஞ்சு ஜுஸ் வைட்டமின் ‘சி’ செறிந்தது. ஆனால் அதைவிட சிறந்தது நெல்லிக்காய். ஒரு நெல்லிக்காய், ஒரு ஆரஞ்சை விட இருமடங்கு வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. நெல்லி ஜூஸ் தினமும் சாப்பிட்டால் மிகவும் நல்லது.